பிள்ளையான் பிணையில் செல்ல வாய்ப்பு.!
பிள்ளையானின் கைது விவகாரம் ஒரு பேசுபொருளாகவே தொடரும் நிலையில் இனிவரும் நாட்களில் பிள்ளையானுக்கான பிணை வாய்ப்புகளுக்கு சாத்தியமிருப்பதாக நம்பப்படுகிறது.
பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசு உறுதியளித்த்துள்ளது.
அப்படி அது நீக்கப்பட்டால் அதன் பின் பிள்ளையான் பிணைகோரமுடியும் அதே நேரம் பிள்ளையான் என்ற நபருக்காக தமிழ்மக்கள் நீண்டகாலமாக அனுபவித்துவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல் இருக்க முடியாது.
கிட்டத்தட்ட இரண்டுமே தமிழ் மக்களுக்கு ஒரே அளவான வேதனைகளையே தந்து நிற்கிறது எனவேதான் செம்ரம்பர் மாதத்திற்கு முன்னர் பிள்ளையானுக்கான விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் கோருகின்றனர்.
இப்போதைக்கு பிள்ளையான் இனியபாரதி தொடர்பில் சாட்சியங்களை சொல்ல அவர்களின் முன்னாள் சகாக்களும் பாதிக்கப்பட்ட மக்களுமாக சாட்சி சொல்ல தயாராகி வருகின்றனர் என்ற நிலையில் இந்த விவகாரம் விரைவுபடுத்தப்படவேண்டியதன் தேவையை பேசுகிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

