13 இன் புறக்கணிப்பை பிரச்சாரம் மூலம் பகிரங்கப்படுத்தும் நாமல் தரப்பு

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Election
By Shadhu Shanker Aug 24, 2024 08:28 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி பாரிய அரசியல் மாற்றத்திக்காக காத்திருக்கும் இலங்கையில் தற்போது பிரசாரங்களும், உறுதிமொழிகளும் சொல்லாடல்களால் மேலோங்கியுள்ளன.

வழமைக்கு அப்பாற்பட்டு பிரதான அரசியல் தலைமைகள் தனித்தனியான போட்டியிடலை மேற்கொண்டுள்ளதால், இந்த பிரசாரங்களில் தோற்றப்பாடு வேறுபடுகிறது.

இங்கு முக்கிய தேர்தல் பிரசார வார்த்தையாக தேசிய பாதுகாப்பு என்ற சொல் அனைத்து மேடைகளிலும் எதிரொலிக்கிறது.

எங்கள் கட்சி தேசிய பாதுகாப்பை இலக்காக கொண்டது, தேசிய பாதுகாப்பே எங்களுடைய நகர்வு என மேடைகளில் பரந்துபட்ட கருத்துக்கள் வெளியாகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள் : வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள் : வெளியான தகவல்

மக்களின் கேள்வி

இங்கு பெரும்பாலான மக்கள் இடத்தில் இருப்பது ஒரே ஒரு கேள்விதான்...

இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 423 பில்லியன் ரூபா என ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இது சதவீத அதிகரிப்பை காட்டுகிறது.

13 இன் புறக்கணிப்பை பிரச்சாரம் மூலம் பகிரங்கப்படுத்தும் நாமல் தரப்பு | Namal S Campaign Promotes 13A Boycott

இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. நவீன வரலாற்றில் தேசியப் பாதுகாப்பிற்கு மிக அதிகமாக பணம் தேவைப்படும்.

ஆனால் ஏறக்குறைய 30 வருடகால யுத்தத்தின் போது நாம் செய்ததை விட யுத்தமில்லாத காலங்களில் நாம் ஏன் அதிகம் செலவிடுகிறோம்?

1960 முதல் 1982 வரை, உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு, நமது பாதுகாப்புச் செலவு மொத்தம் 0.52 பில்லியன் டொலர்கள் மாத்திரமே.

பின்னர், 1983ஆம் ஆண்டை உள்நாட்டுப் போர் தொடங்கிய ஆண்டாகக் கருதி, போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு வரையிலான 26 வருட காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பிற்காக 14.92 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளோம். அதிக செலவை நாம் புரிந்து கொள்ளலாம்.

எந்தவொரு நாடும் போரை எதிர்கொள்ளும் போது, ​​அதன் பாதுகாப்பிற்காக பெரும் செலவை ஏற்படுத்துகிறது.

ஆனால் யுத்தம் முடிவடைந்த 9 வருடங்களில் அதாவது 2010 முதல் 2019 வரையான 9 வருடங்களில் 17.28 பில்லியன் டொலர்களை செலவழித்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

போருக்குப் பிந்தைய காலம்

வேறுவிதமாகக் கூறினால், முழுப் போரை விடவும் போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில் தேசியப் பாதுகாப்பிற்காக அதிகப் பணத்தைச் செலவிட்டுள்ளோம்.

13 இன் புறக்கணிப்பை பிரச்சாரம் மூலம் பகிரங்கப்படுத்தும் நாமல் தரப்பு | Namal S Campaign Promotes 13A Boycott

ராஜபக்சர்களின் ஆட்சியில் நடந்த பெரிய அளவிலான ஊழல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்டன. ஆனால் தற்போதும் கூட ராஜபக்சர்களில் பிரசாரம் தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்த வகையில் அமைகிறது.

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஜே.வி.பிக்கு இல்லை எனவும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) மற்றும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோரால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்றும் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியிருந்தார். அவரின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன,

தேசிய பாதுகாப்பு

"ஜனாதிபதித் தேர்தல் சூடு மேலும் மேலும் அதிகரித்து வரும் ஒரு சந்தர்ப்பம் இது. 04 பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தற்போது ஊடகங்கள் மூலம் பல்வேறு வதந்திகள் மற்றும் அவதூறு பிரசாரங்கள் வெளிவருவதை நாம் காண்கிறோம்.

ஆனால் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது என்ன? இந்த 04 வேட்பாளர்களில் யார் தேசிய பாதுகாப்பை பூர்த்தி செய்ய முடியும் என்பதும், பொருளாதார வேலைத்திட்டம் எவ்வாறு உருவாக்கப்படும் என்பதும் நாட்டு மக்களுக்கு முக்கியமானது.

13 இன் புறக்கணிப்பை பிரச்சாரம் மூலம் பகிரங்கப்படுத்தும் நாமல் தரப்பு | Namal S Campaign Promotes 13A Boycott

நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மண்ணில் விதைக்கக்கூடிய கொள்கையும், மண்ணில் விதைக்கப்பட்ட கொள்கையும், சிந்தனையும் இந்தத் தேர்தல் முழுவதிலும் உள்ள ஒரே ஒரு வேட்பாளரே இருப்பவர் நாமல் என்று நான் நம்புகிறேன்.

2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மகிந்த சிந்தனை கொண்டு வந்த நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதிய சிந்தனைகளை உறையவைத்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே வேட்பாளர் நாமல் ராஜபக்ச மட்டுமே.

அனுரகுமாரால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா? எமது நாட்டில் பௌத்த ஸ்தலங்கள் தாக்கப்பட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தகைய ஒருவரால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்ற கேள்வி எமக்கு உள்ளது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்க வீதிக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்றதுடன்,  காவல்துறை மா அதிபரை அடித்து உதைத்து தற்போதுபதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதைச் செய்தவர்கள் எப்படி தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்? எனவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஜேவிபியிடம் இல்லை.

டொலரின் பெறுமதி 400 முதல் 450 ஆக அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

டொலரின் பெறுமதி 400 முதல் 450 ஆக அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

 அரசியலமைப்புச் சட்டம்

ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதை நோக்காகக் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் இன்றி இந்த மூன்று போட்டியாளர்கள் செயற்படுகின்றனர்.

13 இன் புறக்கணிப்பை பிரச்சாரம் மூலம் பகிரங்கப்படுத்தும் நாமல் தரப்பு | Namal S Campaign Promotes 13A Boycott

நாமல் ராஜபக்சவின் எக்காரணம் கொண்டும் 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த போவதில்லை.

அத்துடன் சில நல்ல விடயங்களை நடைமுறைப்படுத்துவதுடன், எக்காரணம் கொண்டும் தனிநாடு உருவாக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் உள்ள  காவல்துறை அதிகாரம் மற்றும் காணி அதிகாரங்களை நாம் நடைமுறைப்படுத்துவதில்லை.

நாமல் நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய கொள்கைத் திட்டத்தைக் கொண்டுள்ளார்.

இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் இந்த அரசுகளிடம் இருந்து எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் நாங்கள் காணவில்லை. நாங்கள் அந்த முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் எங்களுக்குத் தெரியும்." என்றார்.

2025 ஆம் ஆண்டில் நல்ல அறுவடை கிடைக்கும் : நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி

2025 ஆம் ஆண்டில் நல்ல அறுவடை கிடைக்கும் : நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025