ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு

Vladimir Putin World Russia
By Shalini Balachandran Mar 25, 2024 04:49 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து ரஷ்யாவில் நாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புடின் உத்தரவிட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றியுள்ளார்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை(22) இரவில் பிக்னிக் என்ற பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டதுடன் உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் மற்றும் வெடிகுண்டு வீசியும் தாக்குதலை நடத்தியது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

சர்ச்சைகளுக்கு மத்தியில் உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

மக்கள் அஞ்சலி

இதனால், உள்ளே இருந்த அனைவரும் அலறியடித்து ஓடியதுடன் இந்த தீ விபத்தில் இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததோடு புகை அரங்கம் முழுவதும் பரவியது.

ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு | National Flag Candle Tribute Putin Attack Russia

இதுபற்றி ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளதுடன் அவர்களில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் 182 பேர் காயமடைந்துள்ளதாகவும் 100 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதோடு பலரின் நிலைமை கவலைக்கிடமாவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புடின் வெற்றி பெற்று மீண்டும் ஐந்தாவது முறையாக அதிபரான நிலையில் தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பதனால் உக்ரைனுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகின்ற நிலையில் இந்த சூழலில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மொஸ்கோ தாக்குதலின் போது 15 வயது மாணவன் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்

மொஸ்கோ தாக்குதலின் போது 15 வயது மாணவன் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்

உக்ரைனுக்கு தப்பியோட்டம்

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஷ்யாவில் நாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புடின் உத்தரவிட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றியுள்ளார்.

இதனால் அந்நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று(24) ஒரு நாள் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்ததுடன் இந்த தாக்குதல் பற்றி புடின் தெரிவிக்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பியோட முயற்சித்ததுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளதாக சுட்டிக்காட்டியள்ளார்.

ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு | National Flag Candle Tribute Putin Attack Russia

அத்தோடு சந்தேகத்திற்குரிய நபர்கள் இரண்டு பேருக்கு எதிராக மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதுடன் இதில் தலேர்த்ஜான் பரோதேவிச் மிர்ஜோயேவ் மற்றும் சைதக்ரமி முரோதலி ரசாபலிஜுடா ஆகிய இரண்டு பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

இதில் மிர்ஜோயெவ் என்ற தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுவதோடு இதனால் மே 22 ஆம் திகதி வரை அவரை விசாரணைக்கு முந்தின காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை புரட்டிப் போட்ட சம்பவம்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 28 சடலங்கள்

ரஷ்யாவை புரட்டிப் போட்ட சம்பவம்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 28 சடலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி