சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது...!

Fishing Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Kathirpriya Apr 18, 2024 12:37 PM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

இலங்கையில் இருவேறு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால் நேற்றைய தினம் (17) திருகோணமலை மற்றும் கிளிநொச்சி கடைக்காடு ஆகிய கடற்பரப்புகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம், அந்தவகையில் நேற்றும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்: கடற்படையினரின் அதிரடி சோதனையில் எண்மர் கைது

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்: கடற்படையினரின் அதிரடி சோதனையில் எண்மர் கைது

அனுமதியற்ற வலைகள்

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை அதிகாரிகளால், ரவுண்ட் தீவின் கடல் பகுதியில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது...! | Navy Arrest 12 Sl Fishermen For Illegal Fishing

இதன்போது அனுமதியற்ற கடற்தொழில் வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது மாத்திரமல்லாமல், இந்த சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட வெத்தலகேணி கடற்படையினர், கடைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​இலகுரக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை (01) கைதுசெய்துள்ளனர், இதன்போது சந்தேகநபர் பயன்படுத்திய படகு (01) ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

3.7 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிறிலங்கா கடற்படையினரால் மீட்பு...!

3.7 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிறிலங்கா கடற்படையினரால் மீட்பு...!

சட்ட நடவடிக்கை

இந்த சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா மற்றும் முள்ளியன் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என 21 வயது முதல் 54 வயது வரையிலானவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது...! | Navy Arrest 12 Sl Fishermen For Illegal Fishing

ரவுண்ட் தீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 11 பேரும் சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், படகு மற்றும் அங்கீகரிக்கப்படாத கடற்தொழில் சாதனங்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

தவிரவும், கடைக்காடு கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கடற்தொழில் உபகரணங்களுடன் குறித்த சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023