உண்மைகளை மறைக்க நெடுமாறன் கூறும் பொய் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் பாண்டியன் (காணொளி)
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என தெரிவித்துள்ள பழ. நெடுமாறனின் கருத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இவ்வாறு ஊடகவியலாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.ஐ.பி.சி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நெடுமாறன் தெரிவித்த விடயங்கள் இரண்டும் போலித்தனமானது.முதலாவது,விடுதலைபுலிகள் அமைப்பு தற்போது செயற்படவே இல்லை.அதாவது விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து விலகி வந்தவர்கள் தற்போது ஒரு அமைப்பை வைத்து நடத்துகின்றார்கள்.அதில் பெரிய நெட்வேர்க் எதுவும் கிடையாது.
கடைசிவரை தொடர்பில் இருந்தவர்

இரண்டாவது நெடுமாறனை ராஜீவ் கொலைக்கு முன்பாகவே புலிகள் தொடர்பை துண்டித்துவிட்டார்கள்.அத்துடன் அதிலிருந்து வைகோ,ராமதாஸ் மற்றும் கருணாநிதி ஆகியோரும் வெளியே வந்து விட்டார்கள். கடைசிவரை தொடர்பில் இருந்தவர் திருமாவளவன்தான்.
சுவிட்சர்லாந்திலிருந்து திரட்டப்பட்ட நிதி

சுவிட்டசர்லாந்திலிருந்து புலிகளின் பெயரால் திரட்டப்பட்ட பணம் நெடுமாறனுக்கும் மற்றும் ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இந்த உண்மைகளை மறைக்கவே பிரபாகரனின் குடும்பம் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த மேலும் பல அறியாத விடயங்களை காணொளியில் காணலாம்