காசாவை முழு கட்டுப்பாட்டில் எடுக்க துடிக்கும் இஸ்ரேல் : உற்று நோக்கும் ஈரான்
காசாவில் (Gaza) கடந்த 3 நாட்களில் இஸ்ரேல் (Israel) ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசாவில் ஹமாஸ் (Hamas) அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மறுகல் நிலை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், நாங்கள் காசாவை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
காசாவை கட்டுப்படுத்தும் இஸ்ரேல்
பலஸ்தீனத்தை (Palestine) தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகவும், அதன் முதற்கட்ட பணிதான், காசாவை கட்டுப்படுத்துவது என, நெதன்யாகு பேச்சு குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.
இது தொடர்பில் நெதன்யாகு கருத்து தெரிவிக்கையில், ஹமாஸுடன் சண்டை தீவிரமாக இருக்கிறது. நாங்கள் முன்னேறி வருகிறோம்.
விரைவில் காசா முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம். இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்கள் வெற்றியை தடுக்க முடியாத வகையில் நாங்கள் செயல்படுவோம்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த போரில் கொல்லப்பட்ட பலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை இதுவரை 60,000ஐ கடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவு, மிக குறைந்த அளவே உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்தது.
காசா பகுதி
இதன் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், நேற்று (19.05.2025) திடீரென அதிசயிக்கத்தக்க வகையில், அனைத்து உணவு டிரக்குகளுக்கும் இஸ்ரேல் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கவும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கிறேன் எனவும் இஸ்ரேல் தீவிரமான போரை கையில் எடுத்திருக்கிறது. இந்த போர் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நடந்து வருகிறது.
ஆனால் ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்படி இருக்கையில்தான் காசா பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார்.
சரி இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் ஹமாஸ் முற்றிலுமாக காசாவை விட்டு வெளியேற வேண்டும், காசா ஆயுதம் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை நெதன்யாகு விதித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் இந்த பிரச்சனையை ஈரான் உற்று நோக்கி வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஹவுதி குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டு வந்தன.
இப்போது ஹமாஸை இஸ்ரேல் நெருக்குவதால், இதில் ஈரான் தலையிடவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
