புது போத்தலில் பழைய மதுவுக்கு ஒப்பானது புதிய அமைச்சரவை - கம்மன்பில சாடல்
புதிய அமைச்சரவை புது போத்தலில் உள்ள பழைய மது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் இதை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மதுவுக்கு ஒப்பானது. அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே எமது கோரிக்கையாகும். மக்கள் தங்கள் அடுத்த தலைவர்களை தீர்மானிக்க வேண்டும் வேறு யாராலும் அல்ல” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
New cabinet is old wine in a new bottle. Our demand is for an all party interim government to restore essential services and to hold a parliamentary election. People should decide their next leaders, not by anybody else.#EconomicCrisisLK
— Udaya Gammanpila (@UPGammanpila) April 4, 2022