பாடசாலைகளுக்கான நாளைய விடுமுறை தொடர்பாக விசேட அறிவித்தல்
By Dharu
அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், நாளை திங்கள் கிழமை(16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
விடுமுறை வழங்காதிருக்க
எனினும், மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளைய தினம் வழமைபோல பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்