யாழ்.மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக தமிழ் எம்.பி
யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக நாடாளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீபவானந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறையின் மூலம் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தி வினைத்திறனான சேவையை வழங்குவதை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
முதன்மை நோக்கம்
மத்திய அரசுக்கும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார சேவை நிறுவனங்களுக்கும் இடையே தற்போதுள்ள ஒருங்கிணைப்புக் குறைபாடுகளைக் களைவதன் மூலம், மேலும் திறமையான சேவைகளை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.

மேலும், முந்தைய அமைப்பின் கீழ், உள்ளூர் மட்டத்தில் சுகாதாரப் பிரச்சினைகளை முறையாகக் கண்டறிவதிலும், அவற்றை தேசியத் திட்டங்களில் இணைப்பதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன.
இவ்வாறு நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட பணிகள் மற்றும் பொறுப்புகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |