விவசாயிகளுக்கு எரிபொருள் : அறிமுகமாகிறது புதிய QR குறியீடு முறை
வேளாண்மைத் துறை மற்றும் பல்வேறு தரப்பினருக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒரு புதிய QR குறியீடு முறையைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்காக வாகனங்கள் இல்லாத QR குறியீடு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருண கூறினார்.
புதிய QR குறியீடு முறை
புதிய QR குறியீடு முறை தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறிய ராஜகருண, இது விவசாயிகள் மற்றும்கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எரிபொருள் தேவைகளுக்காக உருவாக்கப்படும் என்றார்.

கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகத்திற்கு அவர்களின் எரிபொருள் தேவைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டு, இந்த புதிய QR குறியீடு முறை உருவாக்கப்படும் என்றும், இந்த புதிய QR குறியீடு அந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணுக்காக உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் புதிய கியூஆர் குறியீடு பல்வேறு முறைகளின் கீழ் உருவாக்கப்படும் என்றும், அதன்படி 7 பிரிவுகளின் கீழ் எரிபொருளைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெட்ரோலியக் கூட்டுத்தபனம் முடிவு செய்யும்
மேலும், இந்தப் பிரிவுகளுக்கு எவ்வளவு எரிபொருள் வழங்கப்படும் என்பதை பெட்ரோலியக் கூட்டுத்தபனம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம், பல்வேறு வணிகங்கள் மற்றும் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் போன்ற தங்களின் சொந்தத் தேவைகளுக்காக எரிபொருளைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் வாகனமில்லா எரிபொருளைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |