அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : இன்று அவசர கூட்டம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதிப்பதற்காக அவசரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான இந்த கூட்டம் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள், அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட பதில்கள் மற்றும் நாளை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்வரும் தினத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) நேற்று (19) அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஓகஸ்ட் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
