மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka
By Dhilak Jun 13, 2026 12:12 PM GMT
Report

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, ஊழல்களில் ஈடுபட்டுவிட்டு, இன்று தங்களைக் தூய்மையானவர்கள் போலக் காட்டிக்கொள்ள முயல்பவர்களைச் சமூகத்தின் முன்னால் வர நாம் இடமளிக்கப் போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2024 செப்டம்பர் ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய ஜனாதிபதி தங்களைச் சந்தித்தபோது இக்குற்றத்தின் உண்மைகளை ஒருபோதும் மறைக்கவிடமாட்டேன் என வாக்குறுதியளித்திருந்தார்.அதற்கமைய, தற்போதைய விசாரணைகள் புத்துயிர் பெற்றுள்ளதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

அரசியல் சதித்திட்டம் 

அத்தோடு, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சதித்திட்டம் ஒன்று இருந்தமைக்கான உறுதியான சான்றுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருவதாகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட பேராயர், அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் மூடிமறைத்த விடயங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன என்றார்.

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு | No Longer Chance To Murderers Cardinal

மேலும், தங்களின் அரசியல் பிம்பம் சிதைந்துவிடும் என்ற அச்சத்தில், இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் ஊடகங்கள், போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் மூலம் விசாரணைகளைப் பின் தள்ளவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் கைவைக்கவும், சாட்சியங்களை அச்சுறுத்தவும் முயற்சிப்பது அருவருக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளைத் தடுப்பவர்கள்

இதேவேளை, அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அஞ்சாமல் உண்மையை வெளிப்படுத்தும் பணியைத் தொடர வேண்டும் என வலியுறுத்திய அவர், குற்றம் செய்யாதவர்கள் விசாரணைகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும், விசாரணைகளைத் தடுப்பவர்கள் தாங்கள் இக்குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு | No Longer Chance To Murderers Cardinal

இறுதியாக, இந்த கொடூரக் கொலை குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் நீதிக்காகத் துணிச்சலுடன் முன்வந்து சாட்சியமளிக்குமாறும், சவால்களுக்கு அஞ்சாமல் உண்மையை நிலைநாட்ட உறுதியுடன் செயற்பட வேண்டும் என்றும் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சொல்லிசைப் பாடகருக்கு பிணை : காரணத்தை வெளிப்படுத்திய கஜேந்திரன்

சொல்லிசைப் பாடகருக்கு பிணை : காரணத்தை வெளிப்படுத்திய கஜேந்திரன்

தடுப்பு காவலில் சுரேஷ் சலேவுக்கு நடந்தது இதுதான்! அமைச்சர் விஜேபால அதிரடி

தடுப்பு காவலில் சுரேஷ் சலேவுக்கு நடந்தது இதுதான்! அமைச்சர் விஜேபால அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026