அநுர தரப்பிற்கு வாக்களிக்குமாறு மிரட்டும் அமைச்சர்கள் : சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Local government Election ITAK National People's Power - NPP Pathmanathan Sathiyalingam
By Sathangani Apr 16, 2025 09:48 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மிரட்டல் தொனியில் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”மன்னாரில் நேற்று (15) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சுற்றாடல் அமைச்சர், இந்த வருடம் பாதீட்டில் இதுவரை எந்த அரசாங்கங்களும் செய்யாத அளவிற்கு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கியுள்ளோம்.

இந்த நிதியை முறையாக அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தவேண்டுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்திஅனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றவேண்டும்.

அநுர கட்சியின் வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்

அநுர கட்சியின் வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்

30 வருட யுத்தம்

அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நிதியை செலவழிப்பதில் தடைகள் ஏற்படலாம். ஆகவே மக்கள் தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அநுர தரப்பிற்கு வாக்களிக்குமாறு மிரட்டும் அமைச்சர்கள் : சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு | Npp Govt Cannot Claim The People S Tax Money

இது மிகமோசமான பிரச்சார யுக்தியாகும், ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்வது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அதனை அவர்கள் தவிர்க்க முடியாது.

வடக்கு மாகாணம் இலங்கையில்தான் அமைந்துள்ளது. வடக்கு மாகாணம் நான் அறிந்தவரையில் தனிநாடல்ல, அப்படிப்பார்த்தால் கடந்த 30வருடங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தத்தினால் உட்கட்டுமானங்கள் நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாதுள்ளது. அங்குள்ள மக்களின் தேவைகள் நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களின் தேவையைவிட வேறுபட்டது.

ஆகவே வடக்கு மாகாணத்திற்கு விசேடமாக அதிக நிதி ஒதுக்கீடுகளை இந்த அரசாங்கம் செய்திருக்கவேண்டும், ஆனால் அவ்வாறு நிதியொதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

பூசா சிறைச்சாலை அதிகாரி படுகொலை : பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

பூசா சிறைச்சாலை அதிகாரி படுகொலை : பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

நாட்டு மக்களின் வரிப்பணம்

இந்த நிலையில் உங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம் அதனை முறையாக பயன்படுத்த எங்களுக்கு மட்டுமே நீங்கள் வாக்களிக்கவேண்டும் என்று கூறுவதன் அர்த்தம் நீங்கள் வேறு யாருக்காவது வாக்களித்தால் அந்த நிதியை நாங்கள் விடுவிக்கமாட்டோம் என்றே அர்த்தப்படவேண்டியுள்ளது.

மத்திய அரசினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியானது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கு சொந்தமானது. அதனை அனுபவிக்க அனைத்து மக்களிற்கும் உரிமையுள்ளது.

அநுர தரப்பிற்கு வாக்களிக்குமாறு மிரட்டும் அமைச்சர்கள் : சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு | Npp Govt Cannot Claim The People S Tax Money

அதுவே ஜனநாயகம் பாதீட்டு நிதி என்பது தேசிய மக்கள் சக்தியின் கட்சி நிதியோ ஜனாதிபதியின் சொந்த நிதியோ அல்ல. இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து பெறப்படுகின்ற நிதியாகும்.

எனவே இவ்வாறான மிரட்டும் தொனியிலான பாணியில் தேர்தல் பிரசாரம் செய்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அமைச்சரின் மிரட்டலுக்கு சரியான பதிலை எதிர்வரும் தேர்தலில் வாக்குப்பலத்தினால் தமிழ்மக்கள் காட்டுவார்கள்“ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு குடியேறிகள் செல்ல பிரான்ஸ் வழங்கும் வாய்ப்பு!

பிரித்தானியாவுக்கு குடியேறிகள் செல்ல பிரான்ஸ் வழங்கும் வாய்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025