சிறுமிகளை தகாதமுறைக்குட்படுத்திய பிக்கு : காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை
மொனராகலை (Monaragala) வெல்லவாய தனமல்வில பகுதியில் இரண்டு சிறுமிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பகுதியைச் சேர்ந்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், 12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளே தாகதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசிய முறைப்பாடு
தபால் மூலமாக கிடைத்த இரகசிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவ்விரு சிறுமிகளையும் மற்றும் சிறுமிகளின் தாய்மார்களையும் காவல்துறையினர் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதில் மேற்படி சம்பவம் அம்பலமாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உடல் ரீதியான தகாதமுறைக்கு உட்படுத்தப்படல் மற்றும் மன உபாதைகளுக்கு உட்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)