யாழில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் பலி
யாழில் தண்ணீரில் மூழ்கி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலைக் கேணியில் குளிப்பதற்காக வந்துள்ளார்.
ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கிக் குளித்துள்ளார்.

இதன்போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |