நிகழ்நிலை பணப்பரிமாற்ற முறையில் மோசடி - எச்சரிக்கை விடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
இணையம் ஊடாக பணம் மோசடி செய்தமை தொடர்பில் 8 சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 26ஆம் திகதி நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாதுவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய இடங்களில் இடம்பெற்ற பண மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீதிமன்றில் அனுமதி
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி, வெலிகம, ரத்கம, வாதுவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 22 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
