அதிரடியாக கைது செய்யப்பட்ட 18 வெளிநாட்டவர்கள்! வெளியான பின்னணி
நாட்டில் தங்கியிருந்தபோது இணையவழிப் பணமோசடி கும்பலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பதினெட்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நீர்கொழும்பு காவல்துறையினர் நேற்று (27.03.2026) நடத்திய சோதனையின் போது இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களும், கணினிகள் உட்பட அது தொடர்பான உபகரணங்களின் இருப்பும் காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
சம்பவத்தின் போது பதினாறு சீன நாட்டினரும் இரண்டு கம்போடிய நாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 06.04.2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தசம்பவம் குறித்து நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |