பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராத நோட்டீஸ்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது தொடர்பான அவரது காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் வெளிவந்த காணொளி விவகாரம் எங்களுக்குத் தெரியும், நாங்கள் அதை விசாரித்து வருகிறோம்.
அபராத நோட்டீஸ்
இந்த விடயத்தை ஆராய்ந்த பின், இன்று ( 20) பிரதமர் ரிஷி சுனக்கிற்கு நிலையான அபராதம் என்ற நிபந்தனை சலுகையை வழங்கியுள்ளோம் என்று லங்காஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் வெளியிட்டிருந்த விளக்கத்தில், சிறிய காணொளியில் பிரதமர் தனது சீட் பெல்ட்டை அகற்றினார். இது தவறு என்று அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பிரதமர் நம்புகிறார். சீட் பெல்ட் அணியத் தவறினால் £500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.