இலங்கையில் வாழ வழியின்றி கதறும் மக்கள் - நியாயப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர் (காணொளி)
எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, அந்நிய செலாவணியை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே எரிபொருளுக்கான விலையினை உயர்த்தியதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பரிந்துரையில் கூறியிருந்தார்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில். இலங்கையானது மீளமுடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் பெரும் பொருளதார தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் பசி - பட்டியினால் மரணிக்க நேரிரும் என பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தற்போது எரிபொருளுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டு சடுதியாக அனைத்து பொருள், சேவைகளுக்குமான விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது. இனிவரும் காலங்களில் மக்கள் எவ்வாறு சாப்பிடுவது? எதனை சாப்பிடுவது? எப்படி உயிர் வாழ முடியும்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது இன்றைய “மெய்மை” நிகழ்ச்சி