மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு அனுமதி : கெஹலிய ரம்புக்வெல
மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அனுமதி
மேலும் அவர் தெரிவிக்கையில், “அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதியாக உள்ளனர்.
நம்மிடம் பல்கலைக்கழகங்கள் தற்போது 11 உள்ளது, ஆனால் இது போதாது. நமது பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் குழுக்களை உலகிற்கு வழங்க வேண்டும். நாம் அதற்கு இணையாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மூன்று தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க நான் அனுமதி அளித்துள்ளேன். அவை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 28 நிமிடங்கள் முன்