அதிபர் ரணிலின் வீட்டிற்கு தீ வைத்தவர் சிக்கினார்
Sri Lanka Police
Ranil Wickremesinghe
Fire
By Jaso
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற அரகலிய போராட்டத்தின் போது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
தனியார் நிறுவனமொன்றில் பணி
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்