கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு
கொழும்பு துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பலை அழைத்து வருவதற்காக அந்தக் கப்பலில் ஏற முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கடல்சார் வழிகாட்டி (Pilot) ஒருவர் கடலில் தவறி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (17.09.2026) இரவு நடந்துள்ளது.
எனினும், குறித்த கடல்சார் வழிகாட்டியை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
P 164 கடலோர ரோந்துப் படகு
கொழும்பு துறைமுகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த P 164 கடலோர ரோந்துப் படகு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த படகு மூலம் கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டு கட்டுப்பாட்டு ஜெட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |