கொழும்பில் பாரிய இணையதள மோசடி! 37 சீனப் பிரஜைகள் கைது
கொழும்பு - தலங்கம பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த பாரிய இணையதள மோசடி கும்பலை சுற்றிவளைத்த காவல்துறையினர் 37 சீனப் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தலங்கம – கொஸ்வத்தை பகுதியில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஒரு பெண் உட்பட குறித்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது, குறித்த வீடு தொலைபேசி பயணர் சேவை போன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தமை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணை
இந்த சுற்றிவளைப்பில் 35 கணினிகள், 37 டேப்லட்கள், 147 கையடக்க தொலைபேசிகள், 100 சிம் அட்டைகள் மற்றும் 2,100 சட்டவிரோத சிகரெட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மூன்று மாத சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |