மட்டக்களப்பில் உடனடியாக இடமாற்றப்பட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைஉயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறை ஆணைக்குழுவின் இடமாற்ற அனுமதியை அடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றப்பட்ட நுவன் மெண்டிஸ் மீண்டும் கொழும்புக்கு நேற்று முன்தினம் உடனடியாக இட மாற்றப்பட்டுள்ளார்.
உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள்
அதேவேளை வாழைச்சேனை உதவி காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பிரியந்த மற்றும் களுவாஞ்சிக்குடி உதவி காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பண்டார இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை ஆயித்தியமலை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த காவல்துறை பரிசோதகர் தென்னிலங்கை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
