ரணில் அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை..! இருளில் மூழ்கப்போம் சிறிலங்கா
இன்றைய தினத்திற்குள் நிலக்கரி கொள்வனவினை உறுதிப்படுத்தாவிட்டால், ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 மணி முதல் 10 மணிநேரம் வரை மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
28ம் திகதி வரையே நிலக்கரி கையிருப்பு உள்ளது
தொடர்ந்து கருத்துரைத்த அவர், “எங்களிடம் 28ம் திகதி வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. பிரச்சனை என்னவென்றால் 28ம் திகதிக்கு பிறகு நிலக்கரி தீர்ந்துவிட்டால் 3 மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டி ஏற்படும்.
சுமார் 820 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும். 8 முதல் 10 மணித்தியால மின்வெட்டுக்கு செல்ல நேரிடும். இன்றைய தினம் நமக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுத தர நடவடிக்கை எடுக்காவிடின் 5 நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பல் ஒன்று நமக்கு வர வேண்டும்", எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,