தற்போதைய அரசாங்கம் நாட்டை பஞ்சத்தை நோக்கி கொண்டு வந்துள்ளது - ஐக்கிய மக்கள் சக்தி
நாட்டை பஞ்சத்தை நோக்கி தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று பாணந்துறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரிசி விலைக் கட்டுப்பாட்டுக்காக வர்த்தமானியை வெளியிட்டனர். அதனை திரும்ப பெற்றனர். சீனி விலைக் கட்டுப்பாட்டுக்கும் வர்த்தமானியை வெளியிட்டனர். அதனையும் திரும்ப பெற்றனர்.
தற்போது பசளைக்கு வர்த்தமானியை வெளியிட்டனர். அதனையும் திரும்ப பெற்றுள்ளனர்.
அனைத்து காய்கறிகளினதும் அறுவடைகளும் குறைந்துள்ளன. அரசாங்கத்தின் முட்டாள்த்தனமான தீர்மானங்கள் காரணமாக பசளைகள் மற்றும் மருந்துகளை உரிய நேரத்தில் வழங்கவில்லை என்பதால், காய்கறிகளின் விலை வரலாற்றில் மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.