போதைப்பொருளுடன் சிறை காவலர் கைது
மொரட்டுவை பகுதியில், சிறை காவலர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை (Hambantota) - அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாம் நிலை சிறைச்சாலையில் பணிபுரியும் சிறை காவலர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவ தலைமையக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அந்த வகையில், காலி (Galle) அஹங்கம திட்டகல்ல சந்தியில் வசிக்கும் 26 வயதுடைய குறித்த சந்தேகநபர் மொரட்டுவை, மொரட்டுவெல்ல, மடம்கஹவத்தையிலுள்ள வீடொன்றில் வைத்து 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமையக காவல்துறையினர்
இந்நிலையில், மொரட்டுவ தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)