மன்னாரில் 36வது நாளாக தொடரும் போராட்டம் : தமிழரசின் மன்னார் கிளை ஆதரவு
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (06) 36 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மன்னார் மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும்“, “நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு“, “அரசே எமது உயிரோடு விளையாடதே“, “சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம்“போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










