நாட்டை ஆட்சி செய்வது ரணிலா - ராஜபக்சர்களா..! அதிகரிக்கும் அடக்குமுறைகள்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kiruththikan Aug 06, 2022 01:32 AM GMT
Report

உண்மையில் தற்போது நாட்டை ஆட்சி செய்வது ரணில் விக்ரமசிங்கவா அல்லது ராஜபக்சர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(5)வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரைக்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் ராஜபக்சர்களின் கட்டளைகளையே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். 

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டால் வரி சலுகையைப் பாதிக்கும் எனக் கூறியவர், இன்று அது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல்கள்

நாட்டை ஆட்சி செய்வது ரணிலா - ராஜபக்சர்களா..! அதிகரிக்கும் அடக்குமுறைகள்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Ranil Mahinda Gotta Sri Lanka Political

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை இழப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றதா? சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்டவை வெறுமனே எமக்கு உதவ முன்வரப் போவதில்லை.

நாட்டில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் மதிக்கப்பட பாதுகாப்பட வேண்டும். மனித உரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து , சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்க முடியாது.

உண்மையில் தற்போது அரசாங்கத்தை நிர்வகிப்பது யார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாமல் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் ஜனநாயகமானதாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

அடக்குமுறைகள் ஊடாக மக்களை முடக்கும் சர்வாதிகார ஆட்சி

நாட்டை ஆட்சி செய்வது ரணிலா - ராஜபக்சர்களா..! அதிகரிக்கும் அடக்குமுறைகள்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Ranil Mahinda Gotta Sri Lanka Political

கொள்கை பிரகடன உரையில் தெரிவித்த விடயங்களை நாடாளுமன்றத்தின் 4 சுவர்களுக்குள் மாத்திரம் வரையறுக்காமல் , அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு அடக்குமுறைகள் ஊடாக மக்களை முடக்கும் சர்வாதிகார ஆட்சியையும் அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024