மன்னாரில் கரை ஒதிங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்!
மன்னாரில் (Mannar) இறந்த நிலையில் கடல் பசுவொன்று கரையொதியுங்கியுள்ளது.
திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் நேற்று (19) இந்த கடல் பசு கரையொதிங்கியுள்ளது.
இதனை அவதானித்த கடற்றொழிலாளர்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடற்கூறாய்வு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆபிரியா என அழைக்கப்படும் பெண் கடல் பசு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது சுமார் 300 கிலோ எடை கொண்டது எனவும் மற்றும் அதன் அகலம் 115 சென்றி மீற்றர் எனவும் சுற்றளவு 230 சென்றி மீற்றர் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடல் பசு
கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா ? அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா ? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் முழுமையான காரணம் தெரியவரும் என கீழக்கரை வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்துள்ளனர்.
இதையடுத்து, வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
