முக்கிய வழக்கிலிருந்து விடுதலையானார் நிதி அமைச்சர் பசில்
திவிநெகும, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான மற்றுமொரு வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் (Kitsiri Ranawaka) குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலின் போது 200 மில்லியன் ரூபா பொது நிதியை பயன்படுத்தி 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.