ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட திட்டம்
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க தொழிலாளர் அமைப்பு ஒரு விசேட திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, செப்டெம்பர் மாதம் 22 முதல் 26 வரை ஒரு விசேட தொலைபேசி சேவைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள, தொழிலாளர் அமைப்புக்கள் மாவட்ட மற்றும் பிரதி அலுவலகங்களில் இதன்மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர் சட்டம்
மேலும் அவை பின்வருமாறு சேவைகளை வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஊழியர் சேமலாப நிதிய இருப்பு மற்றும் கணக்கு விசாரணைகள், தேசிய அடையாள அட்டை அடிப்படையில் உறுப்பினர் விபரங்களைத் திருத்துதல், உறுப்பினர் பதிவு, முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், தொழிலாளர் சட்டம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.
அந்தவகையில், ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்கள் தங்கள் பி-கார்டைக் கொண்டு வருவதுடன், உறுப்பினர் விபரங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டால், அவர்களின் முதலாளியிடமிருந்து ஒரு கடிதத்தையும் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
