ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10000 பேரை காவல்துறை சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குறித்த தகவலை தம்புத்தேகம காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
இந்த நபர்களை 05 ஆண்டுகளுக்கு பணியமர்த்துவதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்
இதேவேளை, உயர் பதவிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் (Sri Lanka Police Headquarters) தெரிவித்துள்ளது.
இதன்படி, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission of Sri Lanka) அனுமதியுடன் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு உடன் நடைமுறையாகும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டது.
நான்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
