சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில

CID - Sri Lanka Police Dayasiri Jayasekara Udaya Gammanpila
By Sathangani Jun 09, 2025 08:14 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சிறிது நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்க்கின்றேன்.

சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இது தொடர்பாக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.

என்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருக்கின்றன, ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன், இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

முதலாம் இணைப்பு

சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கம்மன்பில

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (09) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை

குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை

கொள்கலன் விடுவிப்பு விவகாரம்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக விரைவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara)  அண்மையில் (04.06.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில | Ex Minister Udaya Gammanpila Appears Before Cid

அதற்கமைய தயாசிறி ஜயசேகர கடந்த 04 மற்றும் 06ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் 323 கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எம்மைத் தூற்றியவர்களுக்கு எம் மீது திடீரெனக் காதல்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

எம்மைத் தூற்றியவர்களுக்கு எம் மீது திடீரெனக் காதல்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்