யாழ். நாவற்குழி பகுதியில் கோர விபத்து - குடும்பஸ்தர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Accident
By Thulsi
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில், இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த வேளை, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி