இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு அதிரடி தீர்வு: அமெரிக்காவுக்கு புடின் திலடி
இந்தியாவில் (India) இருந்து அதிக அளவில் வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பிறப்பித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இரு நாடுகள் இடையிலான வா்த்தக சமநிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சா்வதேச பாதுகாப்பு
இதற்கு தீா்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கையை புடின் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலடி தரும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகின்றது.
இந்தியா உள்பட 140 நாடுகளைச் சோ்ந்த சா்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசாா் அரசியல் நிபுணா்கள் பங்கேற்ற கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் இடம்பெற்றது.
குறைந்த விலை
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த புடின், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை தண்டிக்கும் வகையில் அமெரிக்கா வரிகளை விதித்தது.
இதனால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளை குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதன் மூலம் நிவா்த்தி செய்து வருகின்றோம்.
அத்தோடு, இறையாண்மையுள்ள ஒரு நாட்டை கௌரவித்து வருகின்றோம்.
இறக்குமதி
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள வா்த்தக சமநிலையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யும் வகையில் இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் வேளாண்மை பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.
இது தொடா்பாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன், நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்த காலம் முதல் தற்போது வரையில் இந்தியாவுடன் நட்புறவு தொடா்கின்றது.
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிவுடனான (Narendra Modi) எனது சந்திப்புகளும் மற்றும் உரையாடல்களும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
