ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம் : உருக்குலையும் உக்ரைன்
ரஷ்யா (Russia) - உக்ரைன் (Ukraine) மீது 479 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா நேற்றிரவு (8.06.2025) முதல் இன்று (09.06.2025) காலை வரை ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
479 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் ரஷ்யா, உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
இரவு நேரங்களில் ட்ரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை ட்ரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ஷாஹேத் வகை ட்ரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷ்யா தாக்குதலை அதிகரித்துள்ளது.
மேலும் இந்த போர் பதற்றங்களுக்க மத்தியில் ரஷ்யா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
