புற்றுநோய் தேங்காய் எண்ணெய் விவகாரம்! அரசாங்கத்திடம் ஐ.தே.க விடுத்துள்ள கோரிக்கை

srilanka ruwan wijewardene
By Vasanth Apr 01, 2021 01:14 PM GMT
Report

எப்லடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இநத விடயத்தினை அவர் தெரிவித்த்ளளார்.

தொடர்ந்தும்அர் கருத்துத் தெரிவிக்கையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எப்லடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் நாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் அதனை இலங்கை சுங்கம் விடுவித்தும் இருக்கின்றது.

குறித்த தேங்காய் எண்ணெயில் நச்சுப்பொருட்கள் அடங்கியிருப்பது உறுதியான பின்னரும் அதனை விடுத்திருப்பதனால், அவை சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு இடமிருக்கின்றது.

அதனால் மக்கள் இன்று பாரிய சந்தேகத்திலேயே தேங்காய் எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த தேங்காய் எண்ணெயை நாட்டுக்கு கொண்டுவந்த நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நிலைநாட்டவேண்டும்.

அத்துடன் இதுதொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தி இதன் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் இந்த விடயத்தை மூடி மறைக்க நடவடிக்கை எடுத்தால் நாட்டுக்குள் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

அத்துடன் தேங்காய் எண்ணெயை கொள்வனவு செய்ய மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த அச்சத்தை போக்க அரசாங்கம் நடவடிக்கடி எடுக்க வேண்டும்.

ஆனால் இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்களுக்கு இருந்துவரும் அச்சத்தை மேலும் திரிபுபடுத்தும் செயலையே அரச தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கத்தில் இருப்பவர்களே அதுதொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து மக்களை விரக்திக்குள்ளாக்குகின்றனர்.

இறுதியில் குறித்த பிரச்சினை அவ்வாறே மறைக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொடர்பாகவும் சுகாதார பிரிவினர் ஒன்றை தெரிவிக்கும் போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அதற்கு மாற்றமான கருத்தை தெரிவிக்கின்றனர்.

அதனால் அரசாங்கம் தெரிவிக்கும் விடயங்களை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. எனவே நச்சுத்தன்மை அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இதுதொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு இந்த வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015