இலங்கையில் அரசியல் கொதிநிலை! இந்திய உயர்மட்டத்திடம் விசேட கோரிக்கை
பேரழிவிலிருந்து இலங்கையை மீட்க உதவுங்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், இந்திய மக்களும் பேரழிவிலிருந்து இலங்கை மீண்டு வர தொடர்ந்து உதவ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக யார் வந்தாலும், இலங்கைக்கு உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசியல் கட்சிகளிடம் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
நாளை அதிபர் தெரிவு
டுவிட்டர் பதிவொன்றினை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், இலங்கையின் அதிபராக நாளை யார் பதவியேற்றாலும் இலங்கைக்கு உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Irrespective of who becomes the President of Sri Lanka tomorrow it is my humble and earnest request to Hon. PM Shri @narendramodi, to all the political parties of India and to the people of India to keep helping mother Lanka and it’s people to come out of this disaster.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 19, 2022
