மாணவனை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதிக்காத பாடசாலை : முல்லைத்தீவில் சம்பவம்

Human Rights Commission Of Sri Lanka Mullaitivu Grade 05 Scholarship examination
By Jaso Nov 08, 2023 04:56 PM GMT
Report

மாணவன் ஒருவரை புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர் முறைப்பாடு அளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கோம்பாவில் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாட்டிக்கு துணையாக இருந்த தமிழ் சிறுமி மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை

பாட்டிக்கு துணையாக இருந்த தமிழ் சிறுமி மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை

மாணவனுக்கு சத்திரசிகிச்சை

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் கூலிவேலைசெய்து தங்கள் குடும்பத்தினை கொண்டு செல்லும் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான தரம் 5 இல் கல்விகற்ற மாணவனுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவனை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதிக்காத பாடசாலை : முல்லைத்தீவில் சம்பவம் | School Does Not Admit A Student Scholarship Exam

மாணவனது சகோதரி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 163 புள்ளி பெற்று சித்தியடைந்து கல்வி கற்று வருகின்றார். இந்த நிலையில்  மாணவனை புலமை பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார்படுத்தியுள்ளார்கள் இதன்போது மாணவனுக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் மாணவன் இரண்டு மாத காலமாக பாடசாலை செல்லவில்லை அதற்கான மருத்துவ அறிக்கையினையும் பெற்றோர்கள் காட்டியுள்ளார்கள்.

நயினை நாகபூசணியையும் விட்டுவைக்காத சீன தூதுவர்

நயினை நாகபூசணியையும் விட்டுவைக்காத சீன தூதுவர்

பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது

இந்த நிலையில் புலமை பரிசில் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருங்கி வந்தவேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

மாணவனை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதிக்காத பாடசாலை : முல்லைத்தீவில் சம்பவம் | School Does Not Admit A Student Scholarship Exam

இது தொடர்பில் பாடசாலை அதிபரிடமும் பெற்றோர் முறையிட்ட போது மாணவன் 70 புள்ளிகளுக்கு கீழ்தான் பரீட்சைகளில் புள்ளி எடுக்கின்றார் இது போதாது புலமைப் பரிசில் பரீட்சை முக்கியமில்லை அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்

பெற்றோரிடம் வாங்கப்பட்ட கடிதம்

இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும் வாங்கியுள்ளனர்.  பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காகவும் படிப்பித்த ஆசிரியர் தான் படிப்பித்த பிள்ளைகள் அனைவரும் சித்தியடைந்துள்ளனர் என பெருமை பேசவும் உடல் உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மாணவனை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதிக்காத பாடசாலை : முல்லைத்தீவில் சம்பவம் | School Does Not Admit A Student Scholarship Exam

இந்த நிலையில் மாணவன் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பெற்றோர் தெரிவித்தனர். இப்போது பாடசாலை போவதற்கு விருப்பம் அற்ற நிலையில் பரீட்சை எழுதாதது அவனது பெரிய ஒரு ஆசையினை தடுத்துள்ளதை போன்று காணப்படுவதாகவும் அவனுக்கு மனக்கவலையாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.

பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி மாணவர்களின் கலைத் திறன்களை பாராட்டிய கந்தையா பாஸ்கரன்(படங்கள்)

பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி மாணவர்களின் கலைத் திறன்களை பாராட்டிய கந்தையா பாஸ்கரன்(படங்கள்)

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அத்தோடு குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாணவனை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதிக்காத பாடசாலை : முல்லைத்தீவில் சம்பவம் | School Does Not Admit A Student Scholarship Exam

பாடசாலை சமூகம் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலை மாணவரின் பரீட்சையினை தடைசெய்வது  என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படவேண்டும் இது தொடர்பில் கல்வி திணைக்களமோ கோட்டக்கல்வி அலுவலகமோ,சிறுவர் உரிமைதொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களோ உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் இனி இவ்வாறான சம்பவம் வேறு எந்த கஸ்ரப்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் நிறுவப்படவுள்ள பாரியளவிலான 6 மின் திட்டங்கள்

இலங்கையில் நிறுவப்படவுள்ள பாரியளவிலான 6 மின் திட்டங்கள்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021