இன்று சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (மே 15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட அறிவிப்பை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
பாடசாலை நாட்காட்டி
கடந்த சில நாட்களாக மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மழையுடனான வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கும் தேவை ஏற்படின், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையின் பேரில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |