தனியார் வகுப்புக்கு சென்ற தரம் 10 மாணவி மாயம்!
Sri Lanka Police
Colombo
By pavan
கொழும்பு லுணுகலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூரியகொட பகுதியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த தினத்தன்று காலை பிரத்தியேக வகுப்பொன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை

இதனையடுத்து காவல்துறையினருடம் இணைந்து மாணவியின் உறவினர்களும் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி