கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்
Sri Lanka Army
Kilinochchi
Sri Lankan Schools
By Aadhithya
கிளிநொச்சி (Kilinochchi) பூநகரி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 251 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் இன்று (10) நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு படை
கிளிநொச்சி பாதுகாப்பு படை பிரிவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேசத்தில் தெரிவு 2024 ஆண்டில் தரம் 05 புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள 251 மாணவர்களுக்கான குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, 55 ஆவது படைப்பிரிவினுடைய கட்டளை அதிகாரி, இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், பூனகரி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

