சிங்களவர்களின் U.K விசா தமிழ் சூட்சுமம்! நடப்பது என்ன?
இன்று கிறிஸ்வர்களின் பெந்துக்கோஸ் திங்களில் பாவத்தின் சம்பளம் மரணம் என்ற இயேசுவின் கூற்று நினைவூட்டப்படும் பின்னணியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ் சிறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டார்.
2015 இல் யாழ்ப்பாணத்தை மட்டுமல்லாமல் இலங்கையை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா மீதான குருரமான கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை சம்பவத்தில் குற்றவாளியாக தண்டனையை கழித்த ஒருவர் மரணித்துள்ளார்.
ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசியல் அதிகார படுகொலைகளை செய்தவர்கள் அதற்காக குருரமாக போரை ஏவியவர்கள் உட்பட பலர் இன்னும் உலாவருகின்றனர்.
இலங்கையில் போராடிய தமிழருக்கு அரசியல் அடைவுகள் கிட்டவில்லையென்றாலும் பிரித்தானியாவில் உயர்கல்விக்கு சென்ற பல சிங்கள மாணவர்கள் தமது விசாக்களை புதுப்பிக்கும் ஒரு சூட்சும வழிமுறையாக இந்த முறை லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை பயன்படுத்திய விடயம் அதிர்ச்சிகரமான பகிரங்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |