மோசமான வானிலை: இயந்திரக் கோளாறாலுக்கு உள்ளான சிவகங்கை கப்பல்!
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் சிவகங்கை கப்பல், சீரற்ற வானிலை காரணமாக இயந்திரப் பழுதுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம். ஜெயசீலன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''கடந்த சனிக்கிழமை (09.05.2026) மோசமான வானிலை நிலவிய நிலையில் சிவகங்கை கப்பலின் இயந்திரம் செயலிழந்துள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் கப்பல் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தகவல் வழங்கப்பட்டு, அவர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் நோக்கில், கப்பல் நிறுவனமும் துறைமுக அதிகாரிகளும் இணைந்து இரண்டு பெரிய இயந்திரப் படகுகளை மீட்புப் பணிக்காக அனுப்பி, அதன் மூலம் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக நாகபட்டினம் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், பயணிகள், கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பல் அனைத்தும் பாதுகாப்பாக நாகபட்டினம் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் அச்சம் அடையும் வகையில் எவ்விதமான அசம்பாவிதமும் இடம்பெறவில்லை" என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |