விடுதலைப் புலிகளோடு இணைந்து போராடிய முஸ்லிம்கள் - சபையில் சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி.

Jaffna Climate Change Weather Rain
By Independent Writer Sep 13, 2025 01:13 AM GMT
Report

யாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்கள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இதுவரையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தாயகம் என்ற ஒன்று இருப்பதை வெளிப்படையாக கூறியதில்லை.

தாய் நாட்டிற்கு துரோகம் இழைத்தால் மீண்டும் எழுவேன்.! மகிந்த அதிரடி அறிவிப்பு

தாய் நாட்டிற்கு துரோகம் இழைத்தால் மீண்டும் எழுவேன்.! மகிந்த அதிரடி அறிவிப்பு

விடுதலைப்புலிகளின் போராட்டம்

குறிப்பாக சபையில் சில முஸ்லிம் தலைவர்கள் பேசும்போது கூட குரோதமான விடயங்கள் வெளிப்படுத்துவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

விடுதலைப் புலிகளோடு இணைந்து போராடிய முஸ்லிம்கள் - சபையில் சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி. | Sivagnanam Sritharan Mp Parliament Speech

நாட்டில் விடுதலைப்புலிகளின் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் 2001 ஆம் ஆண்டு தொடர்க்கம் 2006ஆம் ஆண்டு வரை சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பொழுது, அதன் அங்கமாக அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அதில் இணைந்திருந்தார்.

அவர் கிளிநொச்சிக்கு வருகைதந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை சந்தித்திருந்தார். இதன்போது, தனியான சமையல்காரரை அழைத்துவந்து பிரபாகரன், உரிய சமையலை செய்து வழங்கியிருந்தார்.

இந்த பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனாக இருக்கட்டும், மூத்த தலைவர் தந்தை செல்வா முதல் - இரா சம்பந்தன் வரை முஸ்லிம் மக்கள் தொடர்பில் மிக தெளிவான எண்ணங்களை தமிழர்கள் கொண்டுள்ளனர்.

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

முஸ்லிம் சகோதரர்கள் போராடி மரணித்துள்ளனர்

மேலும் பெரும் விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம்களுக்காக தமிழ் மக்கள் செய்திருந்தனர். எனினும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, ஒரு நிகழ்வில் சில விடயங்களை கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளோடு இணைந்து போராடிய முஸ்லிம்கள் - சபையில் சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி. | Sivagnanam Sritharan Mp Parliament Speech

அதில் குறிப்பாக அம்பாறையில் உள்ள இந்துக் கோவிலை உடைத்ததாகவும், ஆயுதங்களை வாங்கி ஊர்காவற்படைக்கு வழங்கினேன் எனவும், ஜிகாத் என்ற அமைப்பை உருவாக்கினேன் என்றெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார்.

அப்படி இருந்தும் முஸ்லிம் சகோதரர்கள் மீது எவ்வித கோபங்களும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. காரணம் யுத்த காலத்தில் இரு பக்கங்களுக்கும் நிறைந்த காயங்கள் உள்ளன.

விடுதலைப்புலிகள் போராட்டத்தில் முஸ்லிம் சகோதரர்கள் போராடி மரணித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லிம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட மகிந்த: கொந்தளித்த மொட்டு தரப்பு

போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட மகிந்த: கொந்தளித்த மொட்டு தரப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026