தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Raghav
திருகோணமலை - நிலாவெளி (Nilaveli) கடலில் நீராடச் சென்ற 06 பேர் அலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கடலில் நீராடச் சென்ற போது நேற்று (06) பிற்பகல் குறித்த குழுவினர் இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
கரையோரப் பாதுகாப்பு
திருகோணமலை (Trincomalee) காவல்துறை உயிர்காப்புப் பிரிவு மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து குறித்த குழுவினரை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு அலையில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்