இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை

Sri Lanka Police Colombo India Law and Order
By Sathangani Sep 25, 2025 11:26 AM GMT
Report

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரியை இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இலங்கை கொழும்பு துறைமுக காவல் நிலையத்தில் பணிபுரிந்த பிரதீப்குமார் பண்டார என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5.9.2020ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிய சர்வதேச வங்கி!

இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிய சர்வதேச வங்கி!

காவல்துறையினர் விசாரணை

இந்நிலையில் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு மாற்றப்பட்ட நிலையில் இராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர். 

இந்த விசாரணையில், கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் பிரதீப்குமாரின் சகோதரர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை | Sl Police Officer Illegally Entered India Released

இந்த நிலையில் குறித்த போதைப்பொருளை பிரதீப்குமார் கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.

விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் இராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் விதித்த தடை

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் விதித்த தடை

நீதிமன்றம் தீர்ப்பு 

அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டார ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை | Sl Police Officer Illegally Entered India Released

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார்.

நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்திய அவர் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்துள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்து, காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மக்களை காப்பாற்றுங்கள் : அரசிடம் அவசர கோரிக்கை விடும் நாமல்

வடக்கு மக்களை காப்பாற்றுங்கள் : அரசிடம் அவசர கோரிக்கை விடும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி