இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை

Sri Lanka Police Colombo India Law and Order
By Sathangani Sep 25, 2025 11:26 AM GMT
Report

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரியை இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இலங்கை கொழும்பு துறைமுக காவல் நிலையத்தில் பணிபுரிந்த பிரதீப்குமார் பண்டார என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5.9.2020ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிய சர்வதேச வங்கி!

இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிய சர்வதேச வங்கி!

காவல்துறையினர் விசாரணை

இந்நிலையில் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு மாற்றப்பட்ட நிலையில் இராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர். 

இந்த விசாரணையில், கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் பிரதீப்குமாரின் சகோதரர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை | Sl Police Officer Illegally Entered India Released

இந்த நிலையில் குறித்த போதைப்பொருளை பிரதீப்குமார் கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.

விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் இராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் விதித்த தடை

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் விதித்த தடை

நீதிமன்றம் தீர்ப்பு 

அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டார ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை | Sl Police Officer Illegally Entered India Released

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார்.

நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்திய அவர் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்துள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்து, காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மக்களை காப்பாற்றுங்கள் : அரசிடம் அவசர கோரிக்கை விடும் நாமல்

வடக்கு மக்களை காப்பாற்றுங்கள் : அரசிடம் அவசர கோரிக்கை விடும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026