மூடப்படும் நிலையில் பேக்கரி தொழில் - அரச தலைவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
பேக்கரி தொழில் நடாத்துவதை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் அநாதரவான நிலையில் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி தொழிலை இனிமேலும் கொண்டு நடத்த முடியாது எனவும், சுமார் 200-300 சிறிய பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டு அவற்றின் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 4000 பேக்கரிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பாணை உற்பத்தி செய்கின்றன. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு, பாம் ஓயில், தேங்காய் எண்ணெய் மற்றும் மாஜரின் விலைகள் முன்பை விட 100 வீதம் அதிகரித்துள்ளதை பேக்கரி உரிமையாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி பேக்கரி தொழிலை புத்துயிர் பெற தலையிடுமாறு அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
