மோசடி பேர் வழிகளிடம் சிக்கவேண்டாம் :தாதிய அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு
தாதிய அதிகாரிகளுக்கு ஆண்டுப் பணிமாற்றம் வழங்குவது என்ற போர்வையில், மோசடியாகப் பணம் வசூலிப்பதற்காக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற மோசடிக் கும்பல்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அமைச்சகத்தின் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
தாதிய அதிகாரிகளின் பணிமாற்றங்கள்
சட்டபூர்வ நடைமுறைகளின்படி, தாதிய அதிகாரிகளின் பணிமாற்றங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் அல்லது மாகாண சுகாதார அமைச்சகத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல்களை அமைச்சிடம் தெரிவியுங்கள்
அதன்படி, அமைச்சகங்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் எழுத்துபூர்வமான கோரிக்கையின் பேரில் தவிர, தாதிய அதிகாரிகள் வேறு எந்தத் தரப்பினருக்கும் தகவல்களை வழங்கக்கூடாது என்று சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோசடி அல்லது ஊழல் தொடர்பான தகவல்களை அமைச்சகத்திடம் வழங்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் மேலும் கேட்டுக்கொள்கிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |